1844-வது ஆண்டில் சிதம்பரம் நகரத்தில் வன்னியருக்கும், வேளாளர்களுக்கும் நடைபெற்ற ஓர் பெரிய போராட்டத்தை இங்கே நாம் குறிப்பிட விரும்புகிறோம். இப்போராட்டம் ஓர் யுத்தத்தைப் போல் நடைபெற்று இருக்கிறது. இரண்டு தரப்பாரிலும் அனேகம் பேர் பெரும் கஷ்ட நஷ்டம் அடைநதிருக்கிறார்கள். இடையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் குறுக்கிட்டு இரு தரப்பாரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றனர். விவரத்தை கீழே படியுங்கள்.
1844வது ஆண்டில் தில்லை வாழ் நடராஜர் வசிக்கும் சிதம்பரம் நகரத்தில் கைக்கோளரெனப்படம் செங்குந்தர் வகுப்பில் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அவருடைய பெயர் சரவண முதலி. அன்னவருடைய திருமண ஊர்வலம் பல வீதிகளைக் கடந்து வேளாளர் வாழும் வீதிக்கு வந்தது. இதை வேளாளர்கள் ஆட்சேபித்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தனர். வீண் சண்டைக்கு நின்றனர்.
நீதிக்காக வன்னியர்கள், செங்குந்தர்களுக்கு உதவி செய்தனர்!
பிற்பட்ட சமூகத்தினராகிய செங்குந்தர்கள் இதை பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். பஞ்சாயத்து தலைவனான வன்னிகுலத்தில் உதித்த குப்பு நாயகர் இதை ஆலோசிக்க சபையை கூட்டினார். முடிவில் வேளாளர் செய்தது தப்பு என்று திருச்சபையார் முடிவு செய்து வேளாளர் செய்கையை கண்டித்தனர். இதனால் வேளாளர்களுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. இவர்கள் ரவுடிகளைக் கொண்டு செங்குந்தர் வீடுகளையும் வன்னியர் வீடுகளையும் கொள்ளையடித்து துன்புறுத்த முனைந்தனர். இதனால் செங்குந்தரும், வன்னியரும் மிகவும் துன்பப் பட்டனர். முடிவில் வேளாளரின் கொடுமையை இரு சாராராலும் மேலும் மேலும் தாங்க முடியவில்லை.
இந்நிலையில் சிதம்பரத்திலுள்ள வன்னிய பிரபலஸ்தர்களில் பலர் சோது மன்னர்களின் பிறகால வம்ச பரம்பரையைச் சார்ந்த மன்னனும், வன்னிகுல திலக மணியுமான பித்தர்புரம் குறுநில மன்னரிடம் சென்று நடத்த விஷயங்களைக் கூறி இவ்விஷயத்தில் அவர் தலையிட்டு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டினார். இச்சங்கதியை அறிந்த அம்மன்னருக்கு ஆவேசமும், ஆத்திரமும் ஏற்பட்டு விட்டது. தங்கள் குலத்தவர்கள் அதாவது வன்னியர்கள் பரம ஏழைகளாக இருக்கின்றபடியால் செல்வத்தில் மிகுந்த வேளாளர்களை எதிர்த்து நிற்க முடியாதென்பதை இவர் அறிந்து உடனே இதைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க சிதம்பரம் அடுத்த திருப்போர்க் களம் எனும் ஊரில் அவசர அவசரமாக ஓர் வன்னியர் மகாநாட்டை கூட்டினார். பல இடங்களுக்கு கடிதங்கள் எழுதி அழைப்பு விடுத்தார்.
பித்தர்புரம் மன்னர் தலைமையில் வன்னியர் மகாநாடு கூட்டினர்!
வன்னியர்கள் படை திரண்டனர். ஒன்று கூடி பேசினார். முதலில் நீதிக் கேட்பது. மறுப்பின் போராடுவது என ஓர் முடிவெடுத்தனர். இதற்காக தீரமிக்க வடமலை என்ற ஓர் வீர வன்னியனை படைக்கு தளபதியாக்கி பொறுப்பை அவ்வீரனிடம் ஒப்படைத்தனர். வீரர் படையும் வேளாளர் திக்கு நோக்கிச் சென்றது.
இச்சந்தர்ப்பத்தை அறிந்த வேளாளர்கள் சூழச்சியை கையாள முற்பட்டனர். அதாவது:-
வேளாளரின் சூழ்ச்சி? வன்னியர் படைத் தளபதி கொலை!
போர்த் தளபதியான வடமலையுடன் தாங்கள் ராஜி பேச விரும்புவதாகவும், ஆகவே பொன்னம்பலன் என்பவர் இல்லத்தில் விருந்துக்கு வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று வன்னியர் படை தளபதியான வடமலையும் அவ்விடம் போகவே சொகுசான விருந்து அளிக்கப்பட்டது. ஆனால் திரை மறைவில் சதி வேலை நடந்து விட்டது.
குறைந்த ஆட்களுடன் ராஜி பேச விருந்துக்கு வந்த வன்னியர் படைத் தளபதியை, வேளாளர்கள் ஆதி திராவிடர்களின் உதவியைக் கொண்டு கொலை செய்து விட்டனர். மேலும் இத்தளபதியுடன் வந்திருந்த சிறிய படையை அடித்து சின்னா, பின்னப் படுத்தி, ஓடும்படி செய்து விட்டனர்.
இச்செய்தியை அறிந்த பித்தர்புரம் மன்னர் சீறி விழுந்தார். கடும் கோபம் கொண்டார். சிதம்பரம் வந்தார். சிதம்பரத்திலும் அதன் சுற்றுப் பக்கங்களிலும் உள்ள தம் குலத்தவர்களுக்கு அவசர அழைப்பை விடுத்தார். வீரமிக்க வன்னியர்கள் தமது தலைவனின் அழைப்பை ஏற்று ஓடோடியும் வந்தனர். ஒன்று கூடினர்.
அவ்வமயம் 6 ஆயிரம் பேர் கூட்டத்தில் திரண்டு இருந்தனர். இவர்கள் வசம் கத்தி, கட்டாரி, தடி, அரிவாள், பிச்சுவா, துப்பாக்கி, வில், அம்பு, வெங்கல பீரங்கியாவும் கைவசம் இருந்தன. வன்னியரை இழிவுபடுத்தும் வேளாளர்களையும், அவர்களுக்கு துணையாக ஆதி திராவிடர்களது வீடுகளையும் இடித்து பழிக்குப் பழி வாங்குங்கள். உயர் ஜாதித் திமிர் இன்றோடு ஒழியட்டும். வேளாளர்களின் பணத் திமிரும் அகம் பாவமும் தொலைந்து போகட்டும். இதற்காக நாம் போராடுவோம் அல்லது மடிவோம் என்று பித்தர்புர மன்னர் வீர முழக்கம் செய்தார்.
வாழ்வா? அல்லது சாவா? என்ற போரில், வன்னிர் குதித்தனர்!
வன்னியர் படை எதிரிகள் மீது பாய தயாராகி விட்டது. இதற்குப் படைத் தலைவனாக பூங்காவனத்தையும், உதவி படைத் தலைவனாக புதுவராயன் பேட்டை இராமசாமியையும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரில் உள்ள குடி மக்கள் நாளை என்னவாகுமோ என்று அலறினர். ஊரே அல்லோகலப் பட்டது. எதிரி தரப்பிலும் போர் வீரர்கள் தயாராக இருந்தனர்.
இச்சமயத்தில் சிதம்பரம் தாசில்தார் ரெங்க ராயர் பித்தர்புரம் மன்னரைக் கண்டார். எதிரி தரப்பையும் கண்டு பேசினார். இராசி ஏற்படவில்லை. முடிவில் தன்னிடம் உள்ள போலீசைக் கொண்டு கஜானாவிற்கு காவல் போட்டார். அரசாங்க பொருள்களை கட்டிடங்கள் சேதமுரா வண்ணம் பாதுகாக்க காவாளிகளை நியமித்தார். மற்றும் கலகம் நடப்பதை தடுக்க தம்மிடம் போதிய போலீஸ் இல்லாததால் தனது மேலதிகாரியான ஆர்ச் கலெக்டருக்கு நிலமையை விளக்கி அவரசக் கடிதம் எழுதினார்.
வேளாளர் படை தோற்று ஓடியது! வன்னியர் புலிகொடி வானோங்கி பறந்தது.
இதற்குள் இரு தரப்பாருக்கும் யுத்தம் மூண்டு விட்டது. அனேக வீடுகள் இடிக்கப்பட்டன. எதிரி தரப்பு சொத்துக்கள், தானியங்கள் சூரையாடப்பட்டன. அனேகருடைய உயிருக்கும், உடலுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. சொல்லப் போனால் இந்த கலகம் ஓர் மாபெரும் யுத்தம் போலவே காட்சி அளித்தன. எதிரிகளான வேளாளர்கள் தோற்று ஓடினர். வன்னியர் குலத் தலைவனும் பித்தர்புரம் மன்னன் தம் குலச் சிறுமையை ஒழித்து பெருமையை நிலை நாட்டி தங்கள் வம்ச பரம்பரையின் குலக் கொடியான புலிக்கொடியை வெற்றிக்கு அறிகுறியாக பறக்க விட்டார். சிதம்பர வட்டாரத்து வன்னியர்கள் எல்லோரும் அத்தினத்தை வெற்றி விழாவாக கொண்டாடினார். குதூகலித்தனர். வன்னியர் வாழ்க. எங்கள் தலைவன் பித்தர்புரம் மன்னன் வாழ்க என்ற பேரொலியை விண் அதிரும்படி எழுப்பினர்.
இக்கலகம் மேலும் வளருமோ என்று பயந்த நடுநிலையாளர்களும் இதை சமரசப்படுத்தி விட வேண்டும் என்று எண்ணிய பல பெரியவர்களும், பித்தர்புரம் மன்னனை அடுத்து இராஜி பேசினர். இச்சமயத்தில் அரசாங்க மேலதிகாரிகளும் சிதம்பரம் விஜயம் செய்து இரு தரப்பாரையும் அழைத்து விசாரணை நடத்தினர். முடிவில் வேளாளர் நடத்தையை கண்டித்து இந்த கோர சம்பவங்கள் நடப்பதற்கு மூல காரணஸ்தர்களாக இருந்த செங்குந்தர்களையும் அழைத்து அனைவருக்குள் சமரசம் செய்தனர்.
ஏழை பிற்பட்ட வகுப்பினர்களாகிய கைக்கோளர் எனப்படும் செங்குந்தர்கள் தங்களது விஷயத்தில் இவ்வளவு தூரம் கருணை காட்டி பேருபகாரம் செய்ததற்காக வன்னியர்களுக்கு, பித்தர்புரம் மன்னருக்கும், தங்களது அளவிலாத நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டனர்.
வன்னியரின் குறிக்கோள்! கொள்கை! எல்லாம், அன்றும் இன்றும் என்ன?
இந்நிகழ்ச்சியில் இருந்து வாசகர்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால்:-
- வன்னியராகிய நாம் தனது முன்னேற்றத்திற்கு மட்டும் பாடுபடாமல் ஏனைய பிற்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும் இன்று பாடுபடுவது போலத்தான் சென்ற காலத்திலும் நம் முன்னோர்கள் பாடுபட்டு இருக்கின்றனர்.
- வன்னியர் அக்காலத்திலும் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டுத் தான் எப்போதுமே நடந்து வந்து இருக்கின்றனர்.
- வன்னியர் சென்ற காலத்தில் தங்களை பிறர் இழிவுபடுத்தி, கொடுமைப் படுத்தினதைத் தடுக்க உயிரையும் கொடுத்து போராடி இருக்கின்றனர்.
என்பதை நாம் இதன் மூலம் முக்கியமாக தெரிந்து கொள்ளுகிறோம்.
- ••
பாண்டிய பேரரசின் கால அளவு?
ஆரம்ப கால பாண்டியரின் ஆட்சிக் காலம்
(சரியாக அறிய முடியவில்லை)
இடைக்கால பாண்டியரின் ஆட்சிக் காலம்
கி..பி. 850 – 1100
பிற்கால பாண்டியரின் ஆட்சிக் காலம்
கி.பி. 1100 – 1350
பாண்டிய பேரரசை நிலை நாட்டிய வீர மன்னர்கள்
நெடுமாறன் உக்ரம குமார பாண்டியன் கி..பி. 640 – 660
இம்மன்னன் இலங்கை மீது படையெடுத்து வென்றவன்.
அரிகேசரி பராங்குச பாண்டியன் கி..பி. 710 – 765
முதல் வரகுண பாண்டியன் கி..பி. 765 – 815
இம்மன்னன் சோழர்களையும், பல்லவர்களையும், எதிர்த்து விரட்டி அடித்தவன்
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லப பாண்டியன் கி..பி. 830 – 862
சுந்தர பாண்டியன் கி..பி. 1268 – 1286
இம்மன்னன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டினான்.
பாண்டியர் அரசு அழிய காரணமாக இருந்தவன்
குலசேகர பாண்டியன் கி..பி. 1310
பாண்டியர் ஆட்சியை அழித்த வேற்று நாட்டு மன்னர்கள்
விஜய நகரத்து அரசர்கள்
- ••
சமூகத்திற்கு உழைத்து பட்டம் பெற்றவர்கள்
- ‘வன்னி குலோத்தாரணர்’
கா. கோபால் நாயகர், சென்னை
- ‘வன்னி குல சேகரர்’
வீ. குருசாமி ராயர், பரங்கிப்பேட்டை
- ‘பல்லவ குல சேகரர்’
கா.கோ. பலபத்திர நாயகர், சென்னை
- ‘சம்புகுல சேகரர்’
கந்தசாமி கண்டர், நஞ்சையிடையார்
- ‘சம்புகுல வள்ளல்’
பா.ல. முருகேச நாயகர்
- ‘கவிச் சிங்க ராஜரிஷி’
சு. அர்த்தநாரீச வர்மா, சேலம்
- ‘அலகில் சொற்பொழிவாளர்’
தே. உலக நாத நாயகர், சென்னை
- ‘பிரசங்க பூஷணம்’
ப. இரத்தின சபாபதி நாயகர், சென்னை
- ‘வன்னிய குலோபகாரி’
பு. தியாகராய நாயகர்
- ‘வன்னிகுல போஷகர்’
ம. வெங்கடசாமி நாயகர், ரங்கூன்
- ‘வன்னிய ரிஷி’
கா. ஆறுமுக நாயகர், காஞ்சிபுரம்
- ‘சம்புகுல திலகர்’
கிருஷ்ணசாமி நாயகர், கோவளம்
- ‘பிரசங்கமணி’
எ. கோவிந்த சாமி, கடலூர்
- ‘வன்னிய மகரிஷி’
ஆ. சுப்ரிமணி நாயகர், சென்னை
- ‘நாடக சக்கரவர்த்தி’
காளி, என். ரத்தினம், கும்பகோணம்.
- ‘திருக்குளார்’
திருக்குறள் வி. முனிசாமி எம்.பி. கடலூர்
- ‘வன்னிய தளபதி’
பூ.மு. ஏகாம்பரம் பி.எ., பி.டி., வேலூர்
- ••• •