நமது சமுதாயத்திற்கு கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள்

 

  1. 20% MBC-க்கான ஒதுக்கீடு.

 

  1. சாலை மறியல் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு 3 லட்ச ரூபாய் கருணைத் தொகை அளித்தார். (25 பேருக்கு)

 

  1. இந்த 25 பேரின் குடும்பங்களுக்கு பென்ஷன் 3000 மாதம் தோறும் வழங்கினார்.

 

  1. அரசு சார்பில் இந்த 25 பேருக்கும் “சமூக நீதிப்போராளி” என்ற பட்டம் அளித்தார்.

 

  1. சாலை மறியலின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் மீதான இரண்டு லட்சத்திற்கும் மேலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

  1. குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்தது.

 

  1. 1989 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை தீர்ப்போம் என தெரிவித்து இருந்தார்.

 

  1. ஆட்சி அமைத்த 43வது நாள் கலைஞர் அவர்கள் வன்னிய சமுதாயத்தின் சார்பாக திரு. C.N. இராமமூர்த்தியாகிய நானும் முதல்வர் கலைஞர் அவர்களும் ஒப்பந்தம் ஏற்படுத்தி செயற்ப்படுத்தினார்கள்.

 

  1. வாழப்பாடி திரு. இராமமூர்த்தி அவர்கள், திரு. V.S. இராமமூர்த்தி மற்றும் திரு. C.N. இராமமூர்த்தி அவர்களின் கோரிக்கையை ஏற்று,

 

  1. படையாச்சியாருக்கு சென்னையில் சிலை அமைத்து தந்தார். அன்றைய மேயர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இடம் ஒதுக்கி சிலை அமைத்திட ஏற்பாடு செய்தார்.

 

  1. வன்னியர்களுக்கான பொதுச் சொத்து வாரியம் அமைக்க வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கான பூர்வாங்க பணிகளைத் துவங்கினார்.

 

  1. முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5% தகுதிச் சதவிகிதம் மார்க்கை MBC மாணவர்களுக்கு குறைத்து வாய்ப்புக் கிடைக்கச் செய்தார்.

 

  1. 2009-ல் மீண்டும் பொதுச் சொத்து வாரியம் அமைக்க ஆணைப் பிறப்பித்து திரு. சந்தானம் IAS அவர்களை நியமித்தார்.

 

  1. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்யூர் மற்றும் மரக்காணம் மாவட்டத்தில் 8000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க அனுமதியை மத்திய அரசிடம் பெற்றார்.

 

பொதுவானக் கருத்துக்கள்

 

  1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பொறியியல் கல்லூரி ஏற்படுத்த கொள்கை முடிவெடுத்து செயல்படுத்தினார்.

 

  1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைய வழி வகை செய்வோம் என உறுதிக் கொண்டு ஏற்படுத்தினார்.

 

  1. விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான பணிகளை முடுக்கிவிட்டு போராட்டங்களை வென்று வித்திட்டார்.

 

  1. துணை நகரங்கள் (SATELLITE) ஏற்படுத்த திட்டமிட்டுச் செயல்படுத்தினார்.

 

  1. சமத்துவபுரங்களை ஏற்படுத்தினார்.

 

  1. உழவர் சந்தைகளை ஏற்படுத்தினார்.

 

  1. GREEN AIRPORT ஏற்படுத்த முன்னெடுத்தார்.

 

  1. சாலை மற்றும் பாலங்கள் மேம்பாடு.

 

  1. தொழில் வளர்ச்சி.

 

  1. பட்டியலினத்தவர்களுக்காக தனியாக 1% இட ஒதுக்கீடு அளித்தார்.

 

  1. குடிசை மாற்று வாரியத்தை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

 

  1. கூட்டு குடிநீர்த் திட்டங்களை ஏற்படுத்தினார்.

 

 

பறிபோன மாநில உரிமைகளை மீட்டெடுக்க

முதல்வர் பொறுப்பேற்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

அனைத்து பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என் இராமமூர்த்தி அறிக்கை!

(முரசொலியில் வெளி வந்த செய்தியறிக்கை)

சென்னை, மே 6 – அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் சி.என். இராமமூர்த்தி விடுத்துள்ள வாழ்த்து அறிக்கை வருமாறு:-

பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெக்கும் பணிகளை தொடங்குங்கள் – தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு சி.என். இராமமூர்த்தி வாழ்த்து!

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக் காத்த திரவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய தி.மு.க. தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

அதேநேரம் பல கோடி மக்களை கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என் நான் போட்ட வழக்கின் (WP No. – 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணமாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் நலத்துறையின்படி 15 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி வன்னியர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

அதே போல வன்னிய மக்களின் பொருளாதார மந்த நிலை மாற சமுதாயத்தை சேர்ந்த முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை ஒரே குடையின் கீழ் சேர்த்து பொதுச் சொத்து வாரியம் அமைக்க வேண்டும் என நான் தொடுத்த வழக்கின் காரணமாக (WP No. 26565/2011) அமைக்கப்பட்ட பொதுச் சொத்து வாரியம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். போலிகளின் பிடியில் உள்ள வன்னியர் சொத்துக்களை கைப்பற்றி வன்னியர் சமூகம் வாழ்வாங்கு வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

உங்கள் தலைமையில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல மீண்டும் வாழ்த்துவதிலும், ஆதரவு தருவதிலும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியும், வன்னியர் கூட்டமைப்பும் மகிழ்ச்சி அடைகிறது.

இவ்வாறு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

  • ••

பிற்படுத்தப்பட்டோரின் பிதாமகர்!

(முரசொலியில் 07.09.2021 அன்று வெளியான செய்தி…)

பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராக எழுந்து நிற்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கஸ்டாலின்!

வீதியில் நின்று எதையும் பேசலாம். பதவிக்கு வந்த பிறகும் அதற்கு உண்மையாக இருந்து சட்டங்களைச் செயல்படுத்தித் தருபவர்கள் மட்டுமே சமூகநீதிப் போராட்டத்தின் சளைக்காத போராளியாக வரலாற்றில் பதிய வைக்கப்படுவார்கள், அந்த வரிசையில் 1987 ஆம் ஆண்டு சமூகநீதிப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்த் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள அறிவிப்பு சமூகநீதிப் போராட்டத்துக்கு தரப்பட்ட மரியாதை ஆகும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது (2019 அக்டோபர்) தி.முக. தலைவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார். அதுதான் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வடமாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்கான போராட்டம் அது.

1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள் “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்தார்.

தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆன 43 வது நாள் இது தொடர்பாக வன்னியர் சங்க பொதுச்செயலாளர் சி.என்.இராமமூர்த்தி உள்ளிட்டோரை அழைத்துப் பேசினார். வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை முதல்வர் கலைஞர் கொடுத்தார். உயிர்நீத்த 25 பேர் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கினார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கியவர் முதல்வர் கலைஞர். அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’ அறிவித்தார். 25 பேர்கள் பேரிலும் ‘சமூகநீதித் தியாகிகள்’ என்று அரசு மதிப்பளித்து சான்றிதழும் தந்தவர் முதல்வர் கலைஞர்.

வன்னியர் சமூகத்து பிரமுகர்களான பு.தா. அருள்மொழி, பு.தா. இளங்கோவன், வாழை செல்வன், ராஜேந்திரன், தாராசிங் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

இதன் தொடர்ச்சியாக வாழப்பாடி இராமமூர்த்தி, வன்னிய அடிகளார், சி.என். இராமமூர்த்தி ஆகிய மூவரும் முதல்வர் கலைஞரைச் சந்தித்து, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவரும். முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த தளபதியைச் சந்திக்க வைத்தார் முதல்வர் கலைஞர். சென்னை ஹால்டா சந்திப்பில் படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. முதல்வர் கலைஞரும், சென்னை மேயரும் அந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் 2019 அக்டோபரில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தது. அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்த திமு.க, தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள்

  1. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்.
  2. பேரறிஞர் அண்ணா அவர்களது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, ஏஜி என அறிஞர் அண்ணா அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும்.
  3. ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கும்.

…என்று வாக்குறுதி அளித்தார்கள். மூன்றாவது வாக்குறுதியை கடந்த அ.தி.மு.க. ஆட்சி அரைகுறையாகச் செய்துவிட்டுச் சென்றது. அதனை இன்றைய திமு.க. அரசு தான் சரியாகச் செயல்படுத்தி உள்ளது.

உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டார் முதல்வர்.

அதே போல் ஏ. கோவிந்தசாமிக்கான மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அறிவித்து விட்டார். ஏதோ ஒரு சில கோரிக்கைகளை மட்டுமல்ல; அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராகப் போற்றப்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

அனைத்து சமூகத்தவருக்குமான இடஒதுக்கீட்டை 1921 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதி மன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாகப் போராடி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கினோம். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கினோம். பழங்குடியினருக்கு 1 சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம். பிற்படுத்தப்பட்டோரில் 20 சதவிகிதத்தைப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி ஒதுக்கீடு கொடுத்தோம். அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கினோம். இத்தகைய சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் அனைத்திந்தியப் பணிகளிலும், கல்வியிலும் கிடைக்க வழிவகை செய்தும் வருகிறோம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மக்கள் என்றால் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். தமிழர்களைக் காப்பாற்றும் நீதியாகத்தான் சமூக நீதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்கும் தறுதலைகள் ‘தமிழர்கள்’ வீட்டு வாசலில் நின்று கொண்டு இதைக் கேட்கவும்!

 

  • ••

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu