வன்னிய 50 ஜமீன்தாரர்கள், 150 பாளையகாரர்கள் நிலங்களை கைப்பற்றி வன்னியர்களை அழித்த வரலாறு

 

1950-ஜமீன்தாரர் ஒழிப்பு சட்டம், மற்றும் நில உச்சவரம்பு சட்டம் 1947, 1949, 1950, 1961, 196 மற்றும் 1971. மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் மூலம் மற்ற மாநிலங்களில் மேற்கண்ட சட்டங்களை அமல்படுத்தாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் வன்னிய 50 ஜமீன்தாரர்கள், 150 வன்னிய பாளையகாரர்களின் 25,000 ஏக்கர் நிலங்களுக்கு மேல் அத்துமீறி அரசு மூலம் கைப்பற்றி வன்னியர்களை மட்டும் இரு முதலமைச்சர்களும் அழித்து தங்கள் குலத்தை மட்டும் பெரும் கோடிஸ்வரர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் திட்டமிட்டு மாற்றினார்கள்.

 

1970.ல் நில சீர்திருத்தச் சட்டம் நில உச்சவரம்பு சட்டம் 1961-யை மாற்றி கொண்டுவரப்பட்டது. அதில் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 15 ஏக்கர் மட்டுமே வைத்துகொள்ள முடியும் என சட்டம் கொண்டு வந்து ஜமீன்தாரர்கள், பாளையகாரர்கள், நில சுவான்தாரர்கள் நிலங்களை தமிழக அரசு கைப்பற்றியது.

 

வன்னிய 50 ஜமீன்தாரர்கள், 150 பாளையகாரர்களின் நிலங்களை வன்னிய அறக்கட்டளைகள் உருவாக்கி காப்பாற்றி இருக்கலாம்

 

 

 

 

நிலச் சீர்திருத்தம் சட்டப்படி, மாண்புமிகு.கே.காமராஜர் ஆட்சிப்பொறுப்பேற்ற உடனேயே வன்னிய ஜமீன்தாரர்கள் நிலங்களை கைப்பற்ற நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் – 1955 காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது

 

 

 

தற்போது பட்டாபிஷேகம் மட்டுமே படையாட்சியர்களுக்கு உரிமை டெல்டா படையாட்சிகளான ஜமீன்தாரர்களிடமும் பாளையக்காரர்களிடமும் கொள்ளிடக்கரை இருபுறம் ஏராளமான நிலங்கள் இருந்தன. அனைத்து நிலங்களையும் 1950.ஆம் ஆண்டு,ஜமீன்தார் ஒழிப்பு சட்டம், 1947, 1949, 1950, 1961, 1969 நில உச்சவரம்பு சட்டம், 1971 ஆம் ஆண்டு,மன்னர் மானிய சட்டத்திற்கு உட்பட்டு உறவுகளை வைத்து அறக்கட்டளை உருவாக்காமல், யாரையும் நெருங்கவிடாமல், அனைத்து நிலங்களையும் தன் பெயரில் வைத்துகொண்டு, அனைத்து நிலங்களையும் இழந்தனர். மேலும் பிச்சாவரம் ஜமீன் அண்ணாமலை செட்டியாருக்கு 1000 ஏக்கர், கடனுக்கு 300 ஏக்கர் என தானம் செய்து அனைத்து நிலங்களையும் இழந்தது,

 

 

 

மத்திய அரசு 1958-ம் ஆண்டு நில உச்ச வரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு தனிநபர் அதிகபட்சம் 15 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 15 ஏக்கர் நிலம் இருக்கலாம். அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த வன்னியர்களை தவிர மிராசுதார்கள், ஜமீன்கள் தங்களது நிலங்களை மருத்துவமனைகள், கல்லூரிகள், கோயில்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு எழுதி வைத்தனர். இன்னும் பலர் அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் பேரில் தங்களது நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

 

அதன்பிறகு இந்தியாவில் நில உச்ச வரம்பு சட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களது பெயரிலும் தங்கள் குடும்பத்தினரின் பெயரிலும் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்கள்.

 

ஜி.கே.மூப்பனாரின் குடும்ப நிலங்கள் அனைத்தையும், அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களாக ஆளும் கட்சியினர் மாற்ற ஆலோசனை சொல்லி தமிழக அரசு கைப்பற்றாமல் கைவிட்டு, அவருக்கு உதவி செய்தது.

 

G.K.மூப்பனார் குடும்பங்களின் பெயரிலும் அவர் அறக்கட்டளை பெயரிலும் நிலங்கள்,சுந்தரப்பெருமாள் கோயில், கபிஸ்தலம் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான நிலங்கள் இருந்தன . இவற்றில் பெரும்பாலானவை குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவர்கள் நடத்தி வரும் புலியூர் நாகராஜன் ஸ்ரீ வெங்கடாஜலபதி அன்னதான டிரஸ்ட் அறக்கட்டளை பெயரிலும் ஏராளமான நிலங்கள் உள்ளன.

 

 

இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இந்த நிலங்களை சட்டபூர்வமாக மீட்கப்போகிறேன் எனக் கூறி, பரபரப்பை உண்டாக்கினார்.

 

நில சீர்திருத்தச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம், ஜமீன்தாரர் ஒழிப்பு சட்டம், மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் கீழ்கண்ட அனைத்து அறக்கட்டளைகளுக்கும் தமிழக அரசு விலக்களிக்கிறது.

 

நிறுவனங்கள் கொண்டிருக்க உரிமையுள்ள நிலங்கள் பிரிவு 5 (1) (c) அறப்பண்பு கொண்ட பொதுப்பொறுப்புரிமை அமைப்பு (public trust of charitable nature) கொண்டிருக்கும் உச்ச அளவானது 5 தரநிலை ஏக்கர்கள் பிரிவு 5. (d)

 

ஒரு தனிப்பட்ட பொறுப்புரிமை அமைப்பில் ஒவ்வொரு பயனாளியும் பங்கு அளவு கொண்டவராகவே கருதப்படுவார். விலக்களிப்புகள் (Exemptions)

 

  1. சமய பொறுப்புரிமை அமைப்புகள்
  2. கரும்பு ஆலைகள் பயன்படுத்தப்படும் நிலங்கள்
  3. குன்றுப்பகுதியில் உள்ள நிலங்கள்

போன்றவற்றிற்கான விலக்களிப்புகளும் படிப்படியாக விலக்கப்பட்டுவிட்டன.

ஜூலை, 1959 தேதியில் அல்லது அதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட

  1. தோட்டப்பயிர் பிரிவு 73. (vi)
  2. தோப்புகள் பழத்தோட்டங்கள் பிரிவு 73. (vii)

 

 

  1. எரிபொருளாக பயன்படுத்தப்படும் மரங்கள், பிரிவு 73. (viii)

மற்றும்

  1. பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலங்கள்
  2. பல்கலைக்கழகங்கள்
  3. அரசின் அனுமதியுடன் இயங்கும் நிறுவனங்கள்
  4. கிராம தான மற்றும் பூமி தானத்திற்கு அளிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கான விலக்கு தொடர்ந்து வருகிறது.

 

நில இருப்பின் மீதான உச்ச வரம்பு இச்சட்டத்தின் பிரிவு7 இன் படி 15, பிப்ரவரி, 1970 இச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாள் முதல் எவரும் உச்சவரம்பிற்கு மேல் நிலம் கொண்டிருக்க உரிமையில்லை.

 

 

பல்லவ வம்ச நம் குல வன்னிய குல க்ஷத்ரிய நாயகர்கள், சுவாமிமலை மூப்பனார், டெல்டா கார்காத்தார் பிள்ளை, மணலி முதலியார், பச்சையப்ப முதலியார் என ஏராளமான முதலியார்கள், சோழிய வேளாளர்கள், ஆதினங்கள், செட்டியார் அனைவரும் தங்கள் உறவுகளை வைத்து அறக்கட்டளைகள் உருவாக்கி நில உச்ச வரம்பு சட்டம், ஜமீன்தாரர் ஒழிப்பு சட்டம், மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நிலங்களையும் தங்கள் குலத்தின் அறக்கட்டளைகளாக உருவாக்கி அனைத்து நிலங்களையும் காப்பாற்றி கொண்டார்கள்.

 

நமது மரபார் இருக்கும் கேவல நிலைமை கிராமங்களில் புகுந்து பழகியவர்களுக்கே கோரக் காட்சி விளங்கும். நெற்றி வேர்வை நிலம் விழ பாடுபடும் சொற்ப திரவியத்தைப் பாழுங் கள்ளு சாராயத்திற்கும் வாழ்வொழிய பொறுத்தவர்கள் வார்த்தை சொல்லப் பொறுக்காது வம்பு பேசிச் சூழ்வு பெறு வக்கீல்கள் துரைத்தனத்தார் சுகமடையத் தொலைத்த செல்வம் ஏழ் கடலு நிரம்புமே மதுக்குடிக்குச் செலவிட்ட தெண்ணப் போமோ என்ற நிலையில் ஏழை வன்னியர்களுக்கு ஜமீன்தார்கள், பாளையக்கார்கள் உதவி செய்வது இல்லை. வம்பு வழக்குகளுக்கும் தொலைத்து ஓட்டாண்டி யாவதோடு வன்னிய ஜமீன்தாரர்கள், பாளையகாரர்கள், தனவந்தர்களின் வீடுகளுக்கு காடு, செடி, முள், கல்லு முதலியவை கவனியாது கால் கடுக்க நடந்து தன் குலத்திற்கு உதவிட, கண் கலங்கினார், இராஜரிஷி. சு.அர்த்தநாரீச வர்மா. அவருக்கு கூட உதவுவாரில்லை. நமது குல ஜமீன்கள், பிரபுக்களோ எலக்க்ஷன் கோர்ட் வம்பு வழக்கு முதலியவைகளுக்கே அவர்கள் பணம் அழிகிறதே தவிர குலப் புண்ணியத்திற்கு உதவும் உத்தமர்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்தபிறகு, கிராமங்களில் சங்கம் வளர்த்தார். இராஜரிஷி வர்மா அவர்கள் என பொ.குப்புசாமி கண்டர், திருவருணை க்ஷத்ரிய வாலிப சங்கம். 25.07.1931.ல் வன்னிய ஜமீன்தார்கள், பாளையகாரர்கள் பற்றி குறிப்பிடுகிறார்

 

வன்னிய குல க்ஷத்ரிய 50 ஜமீன்தாரர்கள் பட்டியல் கீழே பதிவிடப்பட்டுள்ளது.

 

 

வன்னிய 50 ஜமீன்தாரர்கள் – பட்டியல்.

 

விஜய நகர அரசர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள் தலைமையில் 50 பாளையங்களைக் கொள்ளிடம் ஆற்றுக்கு வடக்கிலும், தெற்கிலுமாக ஜமீன்களாக பாளையக்காரர்களாக கி.பி.15.ஆம் நூற்றாண்டில் நியமித்தனர்.

 

வன்னிய குல க்ஷத்ரிய ஜமீன்கள் – பாளையக்காரர்கள் பட்டியல்

 

  1. உடையார்பாளையம் ஜமீன்
  2. அரியலூர் ஜமீன்
  3. முகாசாபரூர் ஜமீன்
  4. ஊத்தாங்கால் ஜமீன்
  5. பிச்சாவரம் ஜமீன்
  6. கீழூர் ஜமீன்
  7. செஞ்சி ஜமீன்
  8. காட்டகரம் ஜமீன்
  9. விளந்தை ஜமீன்
  10. பெண்ணாகடம் ஜமீன்
  11. குண்ணத்தூர் ஜமீன்
  12. ஈச்சம் பூண்டி ஜமீன்
  13. பிராஞ்சேரி ஜமீன்
  14. தத்துவாஞ்சேரி ஜமீன்
  15. நெடும்பூர் ஜமீன்
  16. கடம்பூர் ஜமீன்
  17. ஓமாம்புலியூர் ஜமீன்
  18. குணவாசல் ஜமீன்
  19. மோவூர் ஜமீன்
  20. நந்திமங்கலம் பூலாமேடு ஜமீன்.
  21. கிளாங்காடு ஜமீன்
  22. வடக்கு மாங்குடி ஜமீன்
  23. கல்லை ஜமீன்
  24. நயினார் குப்பம் ஜமீன்
  25. திருக்கணங்கூர் ஜமீன்
  26. தியாகவல்லி நடுத்திட்டு ஜமீன்
  27. ஆடூர் ஜமீன்
  28. மேட்டுப்பாளையம், சுண்ணாம்புக் குழி ஜமீன்
  29. இராயப்பநல்லூர் ஜமீன்
  30. சோழங்குன்னம் ஜமீன்
  31. வடக்குத்து ஜமீன்
  32. கறிவேப்பிலை குறிச்சி ஜமீன்
  33. வடகால் ஜமீன்
  34. ஓலையாம்புத்தூர் ஜமீன்
  35. மயிலாடுதுறை ஜமீன்
  36. முடிகொண்ட நல்லூர் ஜமீன்
  37. கடலங்குடி ஜமீன்
  38. வடுவக்குடி ஜமீன்
  39. குறிச்சி ஜமீன்
  40. செல்லப்பன்பேட்டை ஜமீன்
  41. சேத்தமங்கலம் ஜமீன்
  42. கோடங்குடி ஜமீன்
  43. சென்னியநல்லூர் ஜமீன்
  44. கீழ் அணைக்கரை ஜமீன்
  45. இட மணல் ஜமீன்
  46. சுவாமிமலை ஜமீன்
  47. கருப்பூர் ஜமீன்
  48. கூத்தூர் ஜமீன்

 

  1. கார்குடி ஜமீன்
  2. வெளனகிரி ஜமீன்

 

ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம், 1950.

 

  1. ஒரு முன்னோடி சட்டம்: 1950 ஜமைதரி அபாலிஷன் சட்டம், 1947 ல் சுதந்திரம் அடைந்த இந்திய அரசாங்கத்தின் இந்திய அரசின் மிகப்பெரிய பெரிய விவசாய சீர்திருத்தமாகும்.

 

  1. சமூக அமைப்பு: முகலாயர்கள் ஜமீன்தார்களின் பரம்பரை நிலைப்பாட்டைப் பற்றி பேசினர்; பிரிட்டிஷ் ஆட்சியின்போது அவர்களின் நிலைப்பாட்டை உயர்த்தியதோடு, அவர்களை கிரீடத்தின் கீழ்பகுதிகளாகவும் ஆக்கியது.

 

  1. வழிநடத்திய மாநிலங்கள்: அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலமாக ஜமீன்தார் அமைப்பு முறையைத் தொடங்கினாலும், 1949 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், சென்னை, அசாம் மற்றும் பாம்பே ஆகியவை ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தின. உத்தரபிரதேச ஜமீந்தரி அபாலிஷன் கமிட்டியின் (ஜிபி பன்ட் தலைமையில்) அறிக்கை ஆரம்ப மாதிரி. ஆனால் ஜமீன்தார்புகள் அணுகி, நீதிமன்றம் தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக கூறிவிட்டது.

 

  1. சொத்துரிமைக்கான அடிப்படை ‘உரிமை: அரசியலமைப்பு கடத்தப்பட்டபோது சொத்துரிமை உரிமை என்பது 19 மற்றும் 31 ஆம் ஆண்டுகளில் அடிப்படை உரிமையாகும். 1956 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமைக்கான உரிமையை அரசாங்கம் கைவிட்டது. இது அரசாங்கத்தின் நில சீர்திருத்த சட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்தது. ஜமீன்தாரி முறையை ஒழிப்பதில் இது ஒரு துல்லியமான உதவியாளராக இருந்தது, இது நாட்டின் சமூக துணிச்சலை பாதித்தது.

 

  1. பயனாளிகள்: இச்சட்டத்தின் முக்கிய பயனாளிகள், குடியிருப்போருக்கு குடியிருப்போர் அல்லது உயர்ந்த குடியிருப்பாளர்கள், ஜமீன்தார்பூபியிலிருந்து நேரடி குத்தகைகளை வைத்திருந்தனர் மற்றும் மெய்நிகர் நில உரிமையாளர்களாக மாறியது.

 

  1. இழப்பீடு: நாடு முழுவதும் மாநில அரசுகள் 1,700 லட்சம் ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி, ரூபாய் 670 கோடிக்கு ஊதியம் வழங்கியது. சில மாநிலங்கள் நிதிகளை உருவாக்கி, நில உரிமையாளர்களுக்கான பத்திரங்களை வழங்கின. இது 10 முதல் 30 ஆண்டுகளுக்கு மீட்டெடுக்கப்பட்டது.

 

  1. சட்டத்தில் லோபோல்: நிலம் என்பது ஒரு மாநிலப் பொருளாக இருப்பதால், பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு தவிர ஜமீன்தார்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை பயிரிட்டு தங்களைக் காத்துக்கொள்ள அனுமதித்தன.

 

 

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu