தொண்டை நாட்டு (பல்லவ நாடு) மன்னர்கள்?

தொண்டை நாடு என்பது பல்லவநாடு என்பதே யாகும். இது தமிழ்நாட்டில் தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு, சென்னை, சித்தூர், நெல்லூர் முதலிய முழு ஜில்லாக்களும், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சை ஜில்லாவில் சில பாகங்களும் சேர்ந்தது தான் தொண்டை நாடென்றும் அல்லது தொண்டை மண்டலம் என்றும் வழங்கப்பட்டு வந்தன. இப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட தொண்டைவள நாட்டை பல்லவர்கள் அரசாண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாடு, வடநாடு, இவைகள் மட்டுமின்றி உலகிலுள்ள மேல் நாடு, கீழ் நாடுகளிலும் ஆட்சி செய்த அரசர்கள் கூ பல்லவர்கள் ஆட்சி செய்த நீண்ட அளவு தொடர்ந்து ஆட்சி செய்யவில்லை. பல்லவர்கள் சுமார் ஒரு ஆயிரம் ஆண்டு வரை தனது ஆட்சியை தொண்டை மண்டலத்தில் செலுத்தி  இருக்கின்றனர். சிற்சில சமயங்களில் இத்தமிழ்நாடு பூராவையும் வடமேற்கே கிருஷ்ணா நதி (ஐதராபாத்) வரைக்கும் வடகிழக்கே விசாகப்பட்டணம் வரைக்கும் கூடி பல்லவர்கள் தனது ஆட்சியை விஸ்தரித்து அரசாண்டிருக்கின்றனர். இதுபோன்று உலகில் எந்த சாம்ராஜ்யங்களும் நீண்ட வருடமும் அதிக நிலபரப்பையும் ஆண்டிருக்கவில்லை. இந்தியாவில் தோன்றிய சந்திர குப்த சாம்ராஜ்யம், சாளுக்கிய சாம்ராஜ்யஙட. ஆசோக சாம்ராஜ்யம், முகலாய சாம்ராஜ்யம் இவைகள் கூட ஒரு ஆயிரம் வருடம் வரை தனது சாம்ராஜ்யத்தை நீடித்து நடைபெறச் செய்யவே இல்லை. முகலாய சாம்ராஜ்யம் சுமார் 700 வருடம் வரை தான். தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வந்திருக்கின்றது. இது உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்ததில் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவதாகத் தான் வருகின்றது. இவை இந்திய சரித்திரம் கூறும் உண்மை.

 

இவ் உலகில் சுமார் ஓராயிரம் வருடம் வரை

தொடர்ந்து ஆட்சி செய்தவர்கள்

பல்லவர்கள்அன்றி வேறு யாருமில்லை!

 

உலகின் கண் உள்ள வேறு பல மேல் நாட்டு, கீழ் நாட்டில் தோன்றிய பல சாம்ராஜ்யங்களை எடுத்துக் கொண்டாலும் கூட பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி முதலிய சாம்ராஜ்யங்களை நடத்திச் சென்றவர்களும், ஓராயிரம் வருடம் ஒரே குடும்பத்தினர் ஆட்சியை நடத்தி அரசு புரிந்தது கிடையாது. எந்த நாட்டிற்கும் எந்த அரச வம்சத்தினருக்கும் இல்லாத சாம்ராஜ்ய பெருமை பல்லவர்களுக்கும் அவர்கள் நடத்திய சாம்ராஜ்யத்திற்குத் தான் உண்டு.

 

பல்லவர்கள் யார்? தமிழரா, ஆந்திரரா?

அல்லது வெளி நாட்டாரா?

தமிழ்நாட்டிற்கு பெருமை அடையக்கூடிய அளவு புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அப்பல்லவர்கள் யார்? என்று சற்று ஆராய்வோம். இப்பல்லவர்களைப் பற்றி நாட்டினர் சிலாகித்துப் பேசியும், அவர்கள் அழியாத செல்வமாக விடப்பட்டுச் சென்ற மகாபலிபுரம் போன்ற கோயில்களையும் மற்றும் கல்வெட்டுக்களையும் பார்த்துச் செல்லவும் பல தேசத்து வெளி நிபுணர்கள் இந்தியா வந்து புகழ்ந்து கூறினும் இப்புகழுக்கெல்லாம் மூலகாரணமான அப்பல்லவர்களைப் பற்றி சரியாக அறிந்துக் கொள்ள முடியாமல் சரித்திரப் பேராசிரியர்கள் திண்டாடுகின்றனர். பற்பலர் பலபல வீதம் பேசியும், எழுதியும் இருக்கின்றனர். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் பல்லவர்கள் வெளி தேசத்திலிருந்து வந்தவர்கள் என்றும் மற்றும் சிலர் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்றும் மற்றும் சில அறிஞர்கள் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து படையெடுத்து வந்தவர்கள் என்றும், புராண அன்பர்கள் அசுவத்தாமன் என்பவருக்கு பிறந்தவர்கள் தான் பல்லவர்க என்றும் பலவிதமாக ஆராய்ச்சியில் கூறி இருக்கின்றனர் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் பல்லவர்கள் தமிழ்நாட்டினர் தான் என்று கூறுகின்றனர். பல்லவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இப்படி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அவதிபட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தனது ஆராய்ச்சி தான் முடிந்த முடிவு என்று சொல்ல பயப்படுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் தமிழர், இந்தியர் மட்டுமின்றி மேல் நாட்டு ஆங்கிலேயர் ஜெர்மனியர்கள் கூட ஆராய்ச்சி செய்து பல்லவர்கள் யார்? அவர் உள் நாட்டினாரா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிட்டு விட்டு உலக வரலாறு ஆச்சரியத்தில் பல்லவர்களை இரண்டாவதாக சேர்த்து விட்டனர். அதாவது 1. பசிபிக் மகா சமுத்திரத்தின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது.  2. பல்லவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று முடியாது லிஸ்டில் சேர்த்து விட்டனர்.

 

பல்லவர்களுக்கும், வன்னியர்களும்

சம்பந்தம் என்ன?

சரித்திரத்தில் ஆதாரம் உண்டா? உண்டு!

இப்படிப்பட்ட அதிசய பிறவிகளான பல்லவர்களை நாம் வன்னியர் என்றும் நாம் அவர்களுடைய வழி வந்தவர்கள் என்றும் சொல்லுகின்றோம். இது வாசகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். இதைப் போக்க கீழே சில விஷயங்களையும் தருகிறோம்:-

 

மலையைக் குடைந்தது,

கற்கோயில்களை கட்டியது

பல்லவர்களே

 

பல்லவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பத்தில் பற் பலவித மாறுபட்ட கருத்துக்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தாலும் தமிழ்நாட்டில் கற்கோயில்களை முதலில் பல்லவர்க்ள் கட்டினர் என்பதை மட்டும் யாரும் மறுக்கவில்லை. அரச மரத்தடியில் மண்ணினாலும் களி மண்ணினாலும் கட்டப்பட்டு வந்த வழக்கத்தை ஒழித்து கற்கோயில்களை முதல் முதலில் தமிழ்நாட்டில் கட்டினது பல்லவர்கள் தான் என்றும், ஒரு மலையை குடைந்து அதை ஒரு கோயிலாக நிர்மானித்து சென்றது பல்லவர்கள் தான் என்றும் இதையே பின்னால் வந்த இடைக்கால சேர, சோழ, பாண்டி மன்னர்கள் பின்பற்றினர் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட கோயில்களை இன்று அரசாங்கத்தினர் இந்து மத பரிபாலன போர்டின் மூலம் நிர்வாகம் செய்து வருகின்றனர். சமீப காலத்தில் இந்த போர்டின் தலைவராக இருந்து பணியாற்றிய பெரியார் கோவ கிழார் அவர்கள் பல்லவர்களைப் பற்றி கீழ் வருமாறு கூறுகின்றார்:-

 

பல்லவர்கள் யார் என்று இப்போது பல சர்ச்சைகள் நடைபெறுகின்றன. சிலர் பல்லவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கின்றனர் மற்றும் சிலர் பல்லவர்கள் தமிழரே அல்லர் என்றும் கூறுகின்றனர். இதைப் பற்றி நானும் சிறிது ஆராய்ந்தேன். எனது உத்தியோக மேற்பார்வையின் கீழ் பல ஆயிரம் கோயில்கள் இருந்த வருகின்றன. அதில் பல்லவர்கள் கட்டிய கோயில்களும் பல உண்டு. பல்லவர்கள் கட்டிய கோயில்களின் தற்கால நிர்வாகம் (டிரஸ்டிகள்) யாரிடத்திலிருந்தாலும் அக்கோயில்களின் முதல் மரியாதையை அரசகுலத்தினர் என்று உரிமை பாராட்டும் வன்னியர்கள் தான் பெறுகின்றனர். எனவே வன்னியர்கள் இத்தமிழ்நாட்டு பழங்குடிகளாதலால் பல்லவர்கள் தமிழர்கள் தான் என்று கூறுகிறேன் என்று எழுதி இருக்கின்றார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் பல்லவர்களைப் பற்றி ஆராய்ந்து பல்லவர்கள் தமிழர்களல்லர் என்று எழுதி தான் எழுதும் புத்தகத்திற்கு மதிப்புரை வேண்டும் என்று அவரை கேட்டதற்கு தான் நாம் மேலே சொன்ன கருத்துரையை கோவை கிழார் நேர்மாறாக எழுதி இருக்கின்றார்.

கோவை கிழார் ஒரு தமிழறிஞர். அதிலும் ஆங்கில பட்டதாரி. கோயில் மேற்பார்வையிடும் அரசாங்க தலைமை உத்தியோகத்திலிருந்து கல்வெட்டுக்களையும் நடைமுறை பழக்க வழக்கங்களையும் செவ்வனே ஆராயந்தவர். அவர் கூறுகின்றார் வன்னியர் மூதாதைகள் தான் பல்லவர்கள் என்று வரவேற்கின்றோம்.

 

 

தமிழ்ச் சங்கம் மறைந்த பிறகு,

பிற்கால தமிழ்நாட்டின் சரித்திரம் என்ன?

 

 

தமிழ்நாட்டில் எக்காரணத்தினாலே தமிழ்ச் சங்கம் மறைந்த பிறகு தமிழ் நாட்டின் சரித்திரத்தை சரிவர அறிந்துக் கொள்ள முடியவில்லை. கி.பி. 2-ம் நூற்றாண்டிற்குப் பின் தான் தமிழ்நாட்டின் வரலாறு ஒருவாறு ஆரம்பமாகின்றன. அச்சமயத்தில் தான் பல்லவர்கள் தமிழ்நாட்டில் காஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருக்கின்றனர். அந்த நேரத்தில் சிம்ம விஷ்ணு வர்மன் என்ற பல்லவன் ஆட்சியில் இருந்திருக்கின்றான். இந்த அரசனுடைய தகப்பன் பெயர் கூட தெரியவில்லை. ஆதலால் தான் பல்லவர் யார் என்பது சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டு சரித்திரத்தின் இடை நடுவே உள்ள சுமார் ஏழு ஆயிரம் வருட வரலாறு தென்படவில்லை. கிருஸ்து பிறப்பதற்கு முன்னிருந்த ஒன்பது ஆயிரம் வருட தொல்காப்பிய காலத்திற்கும் கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கும் நடுவில் உள்ள சரித்திரம் எங்கு போயிற்று? என்ன ஆயிற்று? என்பது விளங்கவில்லை. ஆகவே கிருஸ்து பிறந்த 2-வது நூற்றாண்டில் தமிழ்நாட்டு சரித்திர வரலாறு கிடைக்கின்றது. அதுவும் பல்லவர் காலத்திலிருந்து தான் தமிழ்நாட்டு பிற்கால வரலாறு தொடர்கின்றது.

 

புத்த மதமும், பல்லவ மன்னர்களும்?

 

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசு செய்த பல்லவ பரம்பரையின் முதல் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு வர்மன் தனது வாழ்நாள் பூராவும் புத்த மதத்தினனாக இருந்திருக்கின்றான். புத்த சகாப்தம் இந்திய நாட்டில் ஏற்பட்டு பல நாடுகளில் பரவிய போது இத்தமிழ்நாட்டிலும் அம்மதம் பரவ முனைந்திருக்கிறது. இதில் முதன்மையாக நின்று வேலை செய்தவன் சிம்ம விஷ்ணு வர்மன் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மன்னர்கள் அல்லது தலைவர்கள் அம்மதத்தை நாட்டில் பரப்ப பாடுபட்ட போது அத்தலைவர்களின் பெயரினாலேயே கால அளவை நிர்ணயித்து தலைமுறைக்கு (பாலி பாஷையில்) சகாப்தம் என பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். உதாரணமாக புத்த சகாப்தம், அசோக சகாப்தம், மௌரி சகாப்தம், குப்த சகாப்தம் என்றெல்லாம் அம்மதத்திற்கு பாடுபட்ட அரசர்களின் பெயரினாலே சகாப்தங்களை (தலைமுறை) நிர்ணயித்திருக்கின்றனர். இது போன்றே தென்னாட்டில் புத்த மதத்தில் விஷ்ணு என்று ஒரு பெயர் அடிபடுகின்றது. தென்னாட்டில் விஷ்ணு என்ற பெயருள்ள புத்த மதத்தை தழுவிய மன்னன் சிம்ம விஷ்ணு வர்மனைத் தவிர வேறு எவருமில்லாததால்  விஷ்ணு சகாப்தம் என்றழைக்கப்பட்டது. முதல் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு வர்மனைத் தான் குறிப்பிடும் என்று திடமாக நம்புகிறோம். மேலும் வன்னிய சமூகத்தில் பிறந்த சிலர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் இன்றும் சென்னையில் பலர் இருக்கின்றனர். நாம் இவர்களை அணுகி உங்கள் முன்னோர்கள் எந்த காலத்தில் புத்த மதத்தை தழுவினர்? உங்களுடைய சகாப்தத்தின் பெயர் என்ன, என்று கேட்டால் தங்கள் சகாப்தம் விஷ்ணு சகாப்தம் என்றும் அந்த சகாப்தத்தில் (தலைமுறையில்) தங்களது முன்னோர்கள் புட்டிஸ்ட்டாக மாறிவிட்டனர் என்றும் கூறுகின்றனர். இதனால் என்ன விளங்குகின்றதென்றால் ஒரு கட்சியில் இருக்கும் ஒரு தலைவனை அத்தலைவனுடைய சமூக மக்களே ஆதரிப்பது போல் புத்த மதத்திலும் இப்படிப்பட்ட சமூகப் பற்று கொண்டு நடைபெற்றிருக்கின்றது என்று நாம் திடமாக நம்பவும் இடம் இருக்கின்றது.

 

பல்லவ மன்னர்களும்,

சைவ மத வளர்ச்சயும்?

 

மேலும் சிம்ம விஷ்ணு வர்மனின் மகன் மகேந்திர வர்ம பல்லவன் ஆட்சியிலும் அன்னவருடைய குமாரன் நரசிம்ம வர்மன் ஆட்சியிலும் சைவ மதம் மிகச் சிறந்து விளங்கி இருந்திருக்கின்றது. முதலில் புத்த மதத்தை பின் பற்றி வந்த மகேந்திர வர்மனை அப்பர் சுவாமிகள் தான் சைவ மதஸ்தனாக மாற்றினார் என்று சரித்திரம் கூறுகிறது. பின்னவரான நரசிம்ம வர்மனுடைய ஆட்சியில் படைக்கு சேனைத் தலைவனாக இருந்து பல்லவ சாம்ராஜ்யத்திற்கே பெரும் புகழை தேடிக் கொடுத்த போர் வீரம் பரஞ்சோதி. சைவ மதத்தை போற்றி சிறு தொண்ட நாயனராக மாறி 64 நாயன்மார்களில் ஒருவறாக விளங்கவும் செய்கின்றார். சைவ மதத்தை பின்பற்றும் இன்றுள்ள வன்னியர்கள் 1. சேரமான் பெருமாள் நாயனார், 2. வல்லாள மகாராசன் இவர்களை சைவ சமயத்தில் போற்றி புகழ்வதைப் போல். 3. சிறு தொண்டனையும் தலைவனாக ஏற்று கொண்டாடவும் செய்கின்றனர். படையாட்சி மரபில் வந்த சிறு தொண்டனை படையாட்சிமார்கள் போற்றி புகழ்வதும் கொண்டாடுவதும் எதனால்? சமூக பற்று அல்லவா!

 

பல்லவர்களுக்கு உள்ள பட்டமும்

வன்னியருக்குள்ள பட்டமும், பெயரும்?

 

வன்னியர்கள் பல்லவ மன்னர்கிள் பின் சந்ததிகள் என்பதற்கு இன்றும் சான்று காணலாம். அன்று வேத மோதிய அந்தணர்களுக்கு சர்மா என்ற பட்டப் பெயர் இருந்திருக்கின்றது. இது போன்றே பல்லவ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஒவ்வொரு மன்னர்களுக்கும் வர்மா என்ற பட்டப்பெயர் வழங்கி இருக்கின்றது. இன்றைய தினம் கொச்சி திருவாங்கூரை ஆட்சி செய்யும் அரசர்களுக்கும், வர்மா என்று தான் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இவ்வித பட்டப்பெயர் இப்பொழுது வேறு எந்த சமூகத்தினருக்கும் கிடையாது. ஆனால் வன்னிய சமூகத்திற்கு மட்டும் வர்மா என்ற பட்டப்பெயர் கொடுத்து அழைக்கப்படுகின்றது. இதற்கு சான்றாக நமது குலகவி அர்த்தநாரீச வர்மா அவர்களே சான்றாகலாம். எனவே அன்று இருந்த  பல்லவர்களின் பட்டப்பெயர்களை இன்று நம் சமூகமே ஏற்று நடைமுறையில் அழைக்கப்பட்டு வருவதால் வன்னிய சமூகம் பல்லவர்கிளின் பின் சந்ததிகள் என்றும், பல்லவர்கள் ஓராயிரம் ஆண்டு ஆட்சி செய்து வந்திருப்பதால், அவர் வழி வந்த நாம் அரச பரம்பரையினர் என்று உரிமை பாராட்டுவதும், முற்றிலும் பொருந்தும் என்றே கூறுகிறோம். இப்பல்லவர்களின் கடைசி பரம்பரை தான் உடையார் பாளையம் குறுநில மன்னர்கள். இப்பரம்பரையின் கடைசி குறுநில மன்னரின் பெயர் ராஜஸ்ரீ கச்சி சின்ன நல்லப்ப காளாக்க தோள உடையார். இவருடைய தம்பியின் பெயர் ராஜஸ்ரீ சின்ன துரை காளாக்க தோள உடையார்.

 

இன்று நீண்ட உறக்கத்திலும், கட்டுப்பாடு தளர்ந்ததும் இருக்கக்கூடிய இச்சமூகத்தை பாராண்ட தமிழ் மன்னர்களின் சந்ததி என்று கூறுகின்றீரே? இதற்காக வேண்டிய ஆதாரங்களை சமயத்திலும், சரித்திரத்திலும் எடுத்துக் காட்டிருக்கின்றீரே? இதற்கான கல்வெட்டு சாசனங்கள் ஏதாவது இருக்கின்றதா? என்று வாசகர்களோ அல்லது வேறு அன்பர்களோ நம்மை கேழ்க்கலாம். இதற்கும் சான்றுகள் ஒன்றள்ள. பல இருக்கின்றன. இதனுடைய விளக்கம் 113-ம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை வாசகர்கள் நன்கு காணலாம்.

 

திருப்பதி கோயிலை கட்டினது யார்?

ஓர் சோழ மன்னன்!

 

இன்று தமிழ்நாட்டிற்கு வடக்கொல்லையாக இருப்பது திருப்பதியே ஆகும். திருமலை என்ற பெயர் மாறி திருப்பதி என்று தமிழும், சமஸ்கிருதமும் சேர்ந்து வழங்கும் அத்திருப்பதி மலை மீது கோயிலையும், திருப்பதிக்கு வடக்கே பாயும் வட பெண்ணை ஆற்றையும் கட்டினவனும், வெட்டினவனும் ஓர் சோழ மன்னன் ஆகும். அந்த சோழ மன்னனின் முழுப்பெயர் கருணாகர தொண்டைமான் வன்னியன்.

 

காலம் மாறியது!

சண்டாளர்கள் சதி செய்தனர்!

வன்னிய சமூகம் அரசை இழந்து விட்டது!

 

மேலே நாம் கூறிய அனைத்தும் நம்முடைய சொந்த கருத்தல்ல. பல ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்தே நாம் கூறுகின்றோம். நாம் கூறுகின்றோம். நாம் ஆராயப் புகுந்த எத்துறையிலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு ஒரு முறைக்கு பண்முறை ஆராய்ந்தே இவைகளை வெளியிடுகிறோம். சமயமாயினும் சரி. அல்லது சரித்திரம் இதிகாச புராணங்களா சிலாசாசணம் ஆயினும் சரி.

 

எதைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் வன்னிய சமூகம் நாடாண்ட சமூகம் என்றும், இன்றுள்ள வன்னிய மக்கள் தமிழ் மன்னர்களின் பின் சந்ததிகள் என்றும், தெள்ளத்தெளிய நன்கு தெரிய வருகின்றது. இப்படிப்பட்ட வீரமிக்க பரம்பரையில்  வந்த இப்போதுள்ள மக்கள், முன்பிருந்த நிலையில் இன்றிருக்கவில்லை. மிகவும் மோசமான நிலைமையில் தான் இருந்து வருகின்றனர். இது இவர்களுடைய தப்பல்ல. பல கால தேச வர்த்தமானங்கள் இவர்களை இப்படிப்பட்ட கீழ்நிலைக்கு இழுத்து செல்லப்பட்டு விட்டது. வாயிருதும் இம்மக்ள் ஊமைகளாக மாறிவிட்டனர்.

 

வலிமை இருந்தும் கோழைகளாக செய்யப்பட்டு விட்டனர். வீரம் இருந்தும் உணர்ச்சி அற்றவராக்கப்பட்டனர். இன்று இவர்களுடைய வீரமும், தீரமும், பண்பும் பூத்திட்ட நெருப்பைப் போல் அணல் குண்றி மங்கி விடப்பட்டிருக்கின்றன. இதை நீக்கி வேலை செய்ய வேண்டியது தான் வன்னியராகப் பிறந்த நமது முக்கியக் கடமை.

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பல்லவர் செதுக்கிய குகை கோயில்கள்?

 

  1. மகேந்திரவாடி வடாற்காடு           ஜில்லா
  2. பல்லவபுரம் (பல்லாவரம்) செங்கற்பட்டு            ,,
  3. மாமல்லபுரம் (மகாபலிபுரம்) செங்கற்பட்டு            ,,
  4. திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு            ,,
  5. வல்லம் செங்கற்பட்டு            ,,
  6. மாமண்டூர் வடாற்காடு             ,,
  7. ,தளவானூர் தென்னாற்காடு          ,,
  8. மண்டபப்பட்டு புதுச்சேரி               ,,
  9. மேலைச்சேரி தென்னாற்காடு          ,,
  10. திருச்சிராப்பள்ளி திருச்சி                 ,,
  11. குன்ராண்டார் கோவில் தஞ்சை    ,,
  12. குடுமியா மலை தஞ்சை    ,,
  13. நாரத்த மலை புதுக்கோட்டை    ,,
  14. சித்தன்ன மலை புதுக்கோட்டை    ,,
  15. சீயமங்கலம் வடாற்காடு    ,,
  16. சிங்கவரம்

(சிங்க பெருமாள் கோயில்) செங்கற்பட்டு            ,,

  1. நாமக்கல் சேலம்    ,,
  2. பழியிலி ஈச்சுரம் புதுக்கோட்டை    ,,
  • ••

பல்லவர்களுடைய வம்ச பரம்பரையை

குறிக்கும் காலம் என்ன?

 

பல்லவர்கள் ஆட்சி செய்ததை நான்கு பரிவாக பிரிக்கலாம். விவரம் கீழ் வருமாறு:-

முற்காலப் பல்லவர்

                (கி.பி. 225 – 340)

 

இடைக்காலப் பல்லவர்

                (கி.பி. 340 – 575)

 

பிற்காலப் பல்லவர்

                (கி.பி. 575 – 900)

 

புதிய பல்லவர் மரபு

                (கி.பி. 900 – 1000)

 

 

  • ••

 

பல்லவர் ஆட்சிக் காலம்

 

 

  1. தொண்டை நாடு (கி.பி. 200 – 900)
  2. சோழ நாடு புகுந்த காலம் (கி.பி. 225 – 250)

சோழ நாட்டை ஆண்ட காலம்        (கி.பி. 225 – 575)

  1. பாண்டிய நாடு புகுந்த காலம் (கி.பி. 250 – 300)

பாண்டிய நாட்டை ஆண்ட காலம்     (கி.பி. 250 – 550)

  1. கி.பி. 850க்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி இடையிடையே குன்றியும், ஓங்கியும், முடிவில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சிநைத்து விட்டன.

 

 

 

  • ••

 

 

 

 

 

 

பல்லவ சாம்ராஜ்யத்தை

நிலை நாட்டிய வீர மன்னர்கள்?

 

பல்லவ அரசர்களில் பல பேர் இருப்பினும், கீழ் கண்டவர்கள் மிகவும் போர்த்திறன் படைத்தவர்கள். இவர்களுடைய வலிமையினால் தான் பல்லவ சாம்ராஜ்யம் ஏற்பட்டு சுமார் ஓராயிரம் வருடம் வரை நீடித்தது.

 

மகேந்திர வர்மன்               (கி.பி. 615 – 630)

நரசிம்ம வர்மன்                 (கி.பி. 630 – 660)

பரமேசுவர வர்மன்              (கி.பி. 670 – 685)

இராச சிம்மன்                  (கி.பி. 685 – 705)

இரண்டாம் நந்தி வர்மன்        (கி.பி. 710 – 775)

தந்தி வர்மன்                   (கி.பி. 775 – 825)

மூன்றாம் நந்தி வர்மன்         (கி.பி. 825 – 850)

 

  • ••

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu