இச்சமயத்தில் முகலாயர் ஆட்சிகு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தென்னிந்தியாவில் ஏன்? இந்தியாவிலேயே வெள்ளையர்களின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று. முதலாவதாக போர்ச்சுக்கீசியரும், 2வதாக டச்சுக்காரரும், 3வதாக ஆங்கிலேயரும், 4வதாக பிரஞ்சுக்காரரும் இந்திய மண்ணில் காலெடுத்து வைத்து முதலில் வியாபாரம் செய்வதைப் போல் வந்து பிறகு நாடு பிடிக்கும் வகையில் இறங்கலாயினர்.
ஆங்கிலேயரின் துப்பாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது!
இவ்விஷயத்தில் ஆங்கிலேயர் முன்னணியில் நின்றும் பராக்கிரமமாகவும் இருந்து வேலை செய்யவே நாலா வட்டத்தில் முதலில் வங்காளமும், 2வது சென்னையும் இவர்கள் கைக்கு வந்தது. அப்போது ஆங்கிலேயரின் ராணுவத்தில் மிகவும் தீரராக இருந்த ராபாட் கிளைவ் தனது சாமர்த்தியத்தால் முதலில் ஆற்காட்டை பிடித்து பிறகு ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி தமிழ்நாடு பூராவும் வெள்ளையரின் ஆட்சிக்கு வர, மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தார். இவருக்கு பின் வந்த ஆங்கிலேயர்களும் இந்த நாட்டை அடக்கி ஆள சகல விதத்திலும் முயன்று முடிவில் தமிழ்நாட்டில் தங்கள் யூனியன் ஜாக் கொடியை நாட்டி தங்கள் ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
வட இந்தியா எங்கிலும் இதே நிலை ஏற்பட்டு இந்திய உபகண்டம் பூராவிலும் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படவும் அமுல் நடக்கவும் ஏதுவாகி விட்டது.
- ••• •