இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு ரூ. 4 கோடியில் மணி மண்டபம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு – வன்னியர் கூட்டமைப்பு நன்றி
சி.என். இராமமூர்த்தி அறிக்கை
(முரசொலியில் வெளிவந்த செய்தியறிக்கை)
சென்னை செப். 3 – வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு:
வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு ரூ. 4 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்படும்.
பலியான தியாகிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிற்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மனதாரா பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
இதே தியாகிகள் 25 பேர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் அப்போது கோரிக்கை வைத்து, 25 நபர்களுக்கு தலா 3 லட்சம் கருணைத் தொகையும், மாதந்தோறும் உதவித்தொகையும், சமூக நீதி போராளிகள் என சான்றிதழும் வழங்கினார்.
இப்போது சட்டமன்றத்தில் 21 பேர்களுக்கு என முதல்வர் அறிவித்ததில் விடுபட்ட 4 பேரையும் சேர்த்து 25 தியாகிகளுக்கு சேர்த்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு சி.என். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
- ••